படம் | THE PRESS AND JOURNAL

இலங்கையிலே நிலைமாற்றுக்கால நீதி பற்றிய பேச்சுவார்த்தைகள் யாவுமே இதுவரைக்கும் காணாமற்போன நபர்களுக்கான அலுவலகம், விசேட வழக்குரைஞருடனான நீதிப் பொறிமுறை, உண்மை அறியும் ஆணைக்குழு மற்றும் திருத்தியமைத்தற் பணிகளுக்கான அலுவலகம் போன்றவற்றை நிலைநிறுத்த வேண்டியதான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கள் பற்றிய நோக்காகவே முழுவதுமாக இருந்துவந்துள்ளது. ஆனால், நிலைமாற்றுக்கால நீதியின் மூலாதாரக் கூறாக உள்ளதான பாதுகாப்புத் துறையினரின் மறுசீரமைப்புப் பற்றி துரதிஷ்டவசமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் கருத்திற்கொள்ளவில்லை. OISL அறிக்கையின் பரிந்துரைகள் பட்டியலிலே பாதுகாப்புப் படையினரின் மறுசீரமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்புப் படையினர்களை முற்றுமாகப் பரிசீலித்து மனித உரிமை மீறல்களிலே ஈடுபட்டுள்ளதாக நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் இருக்கும் நபர்களை அதிலிருந்து அகற்ற வேண்டியதன் முக்கியத்துவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் இணை அனுசரனை வழங்கப்பட்ட அந்தத் தீர்மானம், குறிப்பாக, நேர்மையான நிர்வாக முறைமையினூடாக மோசமான குற்றச்செயல்களிலே ஈடுபட்டுள்ள எவரையும் படையிலே சேர்ப்பதற்கோ அல்லது தொடர்ந்து தங்கவைப்பதற்கோ எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவின் அர்ப்பணிப்பு, இந்தப் பரிந்துரைப்பினை எதிரொலிப்பதாய் உள்ளது. பாதுகாப்புத் துறையினரின் மீள்சீரமைப்பு பற்றிய இப்படியான அர்ப்பணிப்புக்கள் விடுக்கப்பட்டாலுங்கூட, நிலைமாற்றுக்கால நீதியின் மூலாதாரக் கூறாகிய இது வெகுசாதாரணமாக மறக்கப்பட்டுப்போனமை சஞ்சலத்தைத் தோற்றுவிப்பதாய் உள்ளது. குறிப்பாக, ஏனைய பொறிமுறைகளின் வினைத்திறனானதும் தடையின்றியதுமான தொழிற்பாட்டுக்கு அதன் முக்கியத்துவத்தை மனதிற் கொண்டுள்ள ஒருவருக்கு அது சஞ்சலத்தைத் தோற்றுவிக்கும்.

மனித உரிமைகளின் துஷ்பிரயோகங்களும் மற்றும் சர்வதேசக் குற்றச்செயல்களும் மீளவும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கே இப்படியான பாதுகாப்புத்துறை மீள்சீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மனித உரிமைத் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூறச்செய்வதற்கும் இது உதவுகிறது. மேலும், வழக்குத்தாக்கல்கள் அநேகமாக அத்துமீறீயவர்களுள் சிறு தொகையினரிலேயே நோக்கக்குவியம் கொள்ளப்படுவதுண்டு. மீறியவர்களுள் பெரும்பாலானவர்கள் குற்றவியல் நீதிக்கு முன்பதாக என்றுமே கொண்டுவரப்படாமையானது ஒரு “தண்டனையின்மை இடைவெளியை” உருவாக்குகிறது. சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதநேய விதிமுறைகள் ஆகியவற்றை மீறியுள்ளமை தொடர்பாக இலங்கை, பாதுகாப்புப் படைத்துறையானது ஒரு நீண்ட குற்றப் பட்டியலுக்கு முகங்கொடுத்து வந்துள்ளது. இலங்கையிலே நிலைமாற்றுக்கால நீதியானது வினைத்திறனுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமேயாயின், மீறுதல்களுக்குப் பொறுப்பாக இருந்துள்ள நிறுவனங்கள் சமாதனம் மற்றும் நல்லுறவுக்கு ஆதரவு வழங்குபவையாக மாறும்படி உருமாற்றப்படவேண்டியது அவசியமானதாகும். துஷ்பிரயோகம் செய்த நிறுவனங்கள் மக்களைப் பாதுகாக்கும் நிறுவனங்களாக ஆகி, செயலிழந்தும் சமநிலைதழம்பியும் உள்ள நிறுவனங்கள் பற்றிய நினைவுகளை அகற்றுமளவுக்கு அவை வினைத்திறனுடனும் நேர்மையுடனும் செயற்பட்டு குடிமக்கள் நம்பிக்கையை மீளப்பெறவேண்டும்.

பாதுகாப்புத் துறையினை மீள்சீர்திருத்துவதற்கான மிக முக்கியமான பகுதி பாதுகாப்புப் படையினர்களை முற்றாகப் பரிசீலிப்பதாகும். சீர்திருத்தச் செயன்முறையின் இதர பகுதிகள் கட்டமைப்பு தொடர்பான அம்சங்களுடன் இடைப்படுவதாய் இருக்க, முற்றாகப் பரிசீலிப்பதானது அந்தத் துறையினுள் உள்ள தனிநபர்களுடன் இடைப்படுவதாக உள்ளது. இது பொதுமக்கள் சேவையிலே பணிசெய்வதற்கு ஒவ்வொரு நபரினதும் பொருத்தப்பாட்டைத் தீர்மானிக்கும் செயன்முறை எனவும், மனித உரிமைகள் துஷ்பிரயோகங்களுக்குத் தனிப்பட்ட ரீதியிலே பொறுப்பான தனிநபர்களை அகற்றுவதை நோக்காகக் கொண்டது எனவும் விபரிக்கப்படுகிறது. கடந்த காலத்துடன் இடைப்படும்படியாக இலங்கைக்குள் TJ பொறிமுறையின் வருகையானது நம்பத்தகுந்த பாதுகாப்புப் படையினரின் பிரசன்னத்தை வேண்டிநிற்கிறது. மனித உரிமைகளின் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவியல் விசாரணைகளிலும், உண்மை அறியும் ஆணைக்குழு முன்பாகவும், காணாமற்போனோர்களுக்கான அலுவலகத்திலும் சாட்சியம் வழங்கவேண்டிய தேவை ஏற்படும். பாதுகாப்புப் படையினரிலே நம்பிக்கை இல்லாதபட்சத்திலே எந்த ஒரு உண்மை அறியும் அல்லது நீதிச் செயன்முறையும் பயத்தின் மூட்டத்துக்கு உள்ளாகி, கடந்தகாலமானது முடிவுக்குக் கொண்டுவரப்படாத நிலைமை நீடிக்கும். தற்போது அப்படியான நம்பிக்கையும் உறுதியும் நிலவாதபட்சத்திலே ஒரு முழுமையான பரிசீலனைச் செயன்முறை இலங்கைக்கு வேண்டியதாய் உள்ளது.

முழுமையான பரிசீலனைச் செயன்முறையானது, சில நாடுகளிலே மேற்கொள்ளப்படும் முழு அளவிலான களையெடுப்பைப் போலல்லாது, மனித உரிமை மீறல்களுக்குப் பாதுகாப்புத் துறைக்குள் பொறுப்பானவர்களாகக் காணப்படுபவர்களை இனங்காண்பதற்கும் அந்த நபர்களை அகற்றுவதற்குமான முறையானதும் கட்டமைக்கப்பட்டதுமான செயன்முறையை உள்ளடக்கியது. OHCHR இனால் வழங்கப்படும் நடவடிக்கை வழிகாட்டல்கள் முழுமையான பரிசீலனைக்கான கட்டமைப்பை முன்வைத்துள்ளது. முதலாவதாக, சீர்திருத்தம் தேவையான பகுதிகளை இனங்காண்பதற்கு சமூகப் பின்புலத்தின் மதிப்பாய்வுடன் சேர்த்து மதிப்பாயவேண்டிய நிறுவனம் மற்றும் அதன் நபர்களின் மதிப்பாய்வு. அதனைத் தொடர்ந்து, முன்னைய மதிப்பாய்வின் அடிப்படையிலே அப்படியான சீர்திருத்தத்துக்கு வேண்டியதான நியமங்களும் அளவுருகளும் வகுக்கப்படும். இது பணியாளர்களின் எண்ணிக்கை, அவர்களின் கூற்றாக்கம், பணி முன்தேவைகள் மற்றும் தகைமையிலும் நேர்மையிலும் சார்ந்ததாக உள்ளதான தனிநபர் நியமங்கள் போன்றவைகளை உள்ளடக்கும். சர்வதேச மனித உரிமைகள் பற்றிய நியமங்கள் மற்றும் தொழிற்தார்மீக நடத்தை போன்றவற்றையிட்டுத் தனிநபர்கள் கொண்டுள்ள இணக்கத்தினால் அவரவர்களின் நேர்மையானது நேரடியாகத் தீர்ப்பிடப்படும். இந்த நியமங்கள் வரையறுக்கப்பட்டதும், ஒரு சீர்த்திருத்தச் செயன்முறையானது வடிவமைக்கப்படவேண்டும். அப்படியான செயன்முறையின் சுயாதீனத்தையும் சட்டபூர்வத் தன்மையையும் உறுதிசெய்யும்படியாக, அவைகள் பாதுகாப்பு நிறுவனங்கள் சாராத தனியான ஒரு ஆணைக்குழுவினால் நடாத்தப்படல் வேண்டும். அப்படியான ஒரு செயன்முறையானது பணியாளர்களைப் பதிவுசெய்தல், அவர்களை பரிசீலனைக்கு உள்ளாக்குதல், அவர்களின் பின்புலத்தை விசாரித்தல், அவர்களின் தகுதிறனை மதிப்பாய்வு செய்தல் போன்றவைகளை உள்ளடக்கியிருக்கும். யுத்தத்துக்குப் பின்பதான நாடுகளிலே நிலைமாற்றுக்கால நீதியைப் பற்றியதான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அறிக்கையானது எப்படியாக விசாரணைக்கு உள்ளாக்கப்படும் தரப்பார்களுக்கு அவர்களையிட்டதான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு, நிர்வாக அலகின் முன்பதாக அந்தக் குற்றச்சாட்டுகளையிட்ட அவர்களது மாறுத்தாரங்களைக் கூறும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. வழக்கையிட்டதான போதிய அவகாச அறிவிப்பு, வழக்கைச் சவாலிடும் உரிமை அவர்களுக்குப் பாதகமானதாகக் கூறும் தீர்ப்புக்களையிட்டு அவர்கள் நீதிமன்றத்துக்கோ அல்லது வேறு சுயாதீன அலகுக்கோ அப்பீல் செய்யும் உரிமை போன்றதான உரிமைகள் அவர்களுக்கு உண்டு.

இவை அனைத்துமே கட்சித் தொடர்பிணைப்பு, அரசியற் கருத்து அல்லது வேறொரு அரச நிறுவனத்துடனான கூட்டிணைவு போன்றவற்றின் அடிப்படையிலே கொடுபடும் தகுதியின்மை அல்லது நீக்கிவைத்தலின் பரந்துபட்டதான கதறல்களாகும். மறுபுறத்தே, முற்றுமான பரிசீலனையோ மனித உரிமைகளின் மோசமான மீறுதல்களை இழைத்த தனிநபர்களை மாத்திரமே அகற்றுவதை நோக்காகக் கொண்டதாய், சட்டத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாக நடந்து கொண்டு பொருத்தமான வல்லமைப்புகளின் கௌரவத்தை நிலைநாட்டும் நேர்மைத்தனம்   கொண்ட, சகல குடிமக்களினதும் உரிமைகளைப் பாதுகாத்துத் தமது கடைமையை நன்கு செய்யக்கூடிய தகைமை கொண்ட தனிநபர்களைப் பாதுகாப்புத் துறையிலே விட்டுவைக்கும்.

உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்ட முற்றுமான பரிசீலிப்புகள் பல்வேறு விதப்பட்ட சவால்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளன. கொஸோவோ நாட்டிலே, கொஸோவோ உளவுத்துறை (KIA) யின்கீழ் பாதுகாப்பு அனுமதித் திணைக்களத்தால் முற்றுமான பரிசீலிப்பானது கையாளப்படுகிறது. இது சுயாதீனத்தை உறுதிசெய்யும்படியாக மேற்கொள்ளப்பட்டது. ஆயினும், இது   தொடர்பிலே உள்ளவைகளுடன்கூட, இந்தச் செயன்முறைகளை பொருட்டாகக் கருதாத நாடாளுமன்ற உறுப்பினர்கள், KIA இன் பொறுப்பில் உள்ள தொகுக்கப்பட்ட தகவல்களைப் பெற்றடைவதற்கு பாதுகாப்பு அனுமதி பெறவேண்டிய நிர்ப்பந்தமானது இதனை விவாதத்துக்குரிய விடயமாக்கிவிட்டுள்ளது. இவ்வண்ணமாக KIA இன் சிவில் மற்றும் ஜனநாயக மேற்பார்வை சமரசம் பண்ணப்படுகிறது. கொஸோவோவில் உள்ள அப்பீல் முறைமைகளும் சவாலானவைகளாக உள்ளன. அப்பீல்கள் யாவுமே KIA இற்குள் அமைந்துள்ளதும் சுயாதீனமானதெனக் கருதப்பட்டதுமான பிறிதொரு அலகுக்கு வழங்கப்பட வேண்டியதாக, அல்லது இக்கட்டான நிலைமைகளிலே நீதித்துறைக்கு வழங்கப்பட வேண்டியதாய் இருந்தது. அப்பீல்கள் KIA இடம் விடுக்கப்படவில்லை. அத்துடன், நீதித்துறை இப்படியாக வழக்குகளுடன் இடைப்படுவதிலே அனுபவம் குன்றியதாக இருந்தமையால், இறுதியிலே நாடாளுமன்றக் கமிட்டியன்று, அப்படியான அப்பீல்களுடன் இடைப்படுவதற்கு சட்டபூர்வ அனுமதி பெற்றிராத நிலைமையிலும், அவைகளுடன் இடைப்படத் தீர்மானித்தது. எகிப்திலே இந்த முறைமையானது நியமங்களை வகுப்பதிலே ஒரு சமநிலையைக் கண்டுகொள்வதற்காகத் தத்தளித்தது. அவர்கள் பரந்துபட்ட செயற்பாடுகளிலே ஈடுபட்டு, முன்னைய ஜனாதிபதியின் அரசியல் வாழ்விலே பங்கேற்பதைத் தடை செய்வதனைக் கருத்திற் கொண்டனர். அதிலிருந்து அவர்கள் மிகவும் விடாப்பிடியானவர்களாய் வளர்ந்தனர். குற்றச்செயல் செய்தமைக்கான சான்று இல்லாமலேயே தடைகளை அமுல்படுத்தும் அதேவேளையிலே ஆளும் கட்சியின் சிறந்தவர்களால் வெளியே இடம்பெறும் துஷ்பிரயோகங்களையும் உதாசீனம் செய்யும். கென்யாவிலே தொடர்ந்து இடம்பெற்றுவரும் முற்றுமான பரிசீலனை நிகழ்ச்சித் திட்டமானது அரசியல் விருப்பம் குறைவாக இருப்பதன் காரணமாக மிகவும் மந்தகதியிலே செயற்பட்டு வந்ததுடன், அது பாதுகாப்புத் துறையினர்களுக்குள் ஒருவித ஏக்கத்தை எழுப்பியது. மேலும், அரசியல் ஈடுபாடுகள் காரணமாக அதற்குள் வெளிப்படைத்தன்மையும் சுயாதீனமும் குறைவானதாகவே இடம்பெற்றது. உண்மையிலேயே முழுவதுமான பரிசீலனையானது திறன் மற்றும் பொருத்தப்பாடு ஆகிய அடித்தளமிட்டதாயும், தொழிற்தர்மம், செய்து எண்பித்தல், கட்டுப்பாட்டொழுங்கு, மனித உரிமைகள் பதிவுகளும் தராதரங்களும் ஆகியவற்றிலே மேற்கொள்ளப்பட வேண்டியதெனக் கருதப்பட்டது. இதற்குப் பதிலாக அதன் குவியநோக்கமானது செல்வச்செழிப்பு மற்றும் தனிநபர் நிதிவளம் போன்ற விடயங்களுக்கு நகர்ந்ததுடன், மெய்யான சேவைப் பதிவுகளுக்கு சொற்ப கரிசினையே வழங்கப்பட்டது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக சுரண்டல் பற்றிய குற்றச்சாட்டுகள் நிலவிவந்துள்ளன. இப்படியான எந்தச் சவால்களுக்கும் இலங்கை தடையாக இராது. இதற்கு மேலதிகமாக, பாதுகாப்புத் துறையினரின் மீள்சிரமைப்பு பற்றிய கோஷத்தையிட்ட பொதுமக்கள் உணர்வலைகள் மிகவும் எல்லைப்பட்டதாகவே உள்ளன.

மீள இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்குப் பாதுகாப்புத் துறையின் மீள்சீரமைப்புக்கு முழுமையான பரிசீலனையானது அவசியமானதோர் கூறு என்பதையிட்டு இருவேறு கருத்துக்கள் கிடையாது. இலங்கை அரசாங்கமானது அப்படியான ஒரு மீள்சீரமைப்பினை மேற்கொள்வதற்கும், அதனை உறுதிப்படுத்துவதற்கும் உறதிமொழியை வழங்கியுள்ளது என்பது உண்மை. வினைத்திறனில்லாத முழுமையான பரிசீலனையானது, தம்மைத் துஷ்பிரயோகித்து, தமது உரிமைகளை மீறியோர் பற்றிய பயம், பாதிக்கப்பட்டோர்களிலே தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்யும். அது கவனத்தில் கொள்ளப்படாவிட்டால், அந்த அச்சமானது உண்மைக்கும் நீதிக்குமான எந்த ஒரு செயன்முறைகளையும் தடம்புரளச் செய்திடக்கூடும்.

Esther Hoole