கொவிட்-19 இனால் இறந்தவர்களின் உடலங்களைப் புதைப்பதற்கு தீவை உபயோகிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அங்கு வதிவோர்கள் தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்த பின்னர் இரணைத்தீவு, இந்த மாதம் வெளிவந்த செய்திகளில் தேசிய மட்டத்தில் அதிகம் இடம் பிடித்தது.

ஏப்ரல் 23, 2018 அன்று, 25 வருடங்களுக்கும் மேலாக இலங்கை கடற்படையினர் அபகரித்துவைத்திருந்த, தங்களது நிலத்தை இரணைத்தீவு வாசிகள் மீளக்கோரினர். சிறிசேன – ரணில் அரசாங்கம் மற்றும் அதேபோன்று ராஜபக்‌ஷ அரசாங்கம் என்பவற்றால் அடிப்படை உட்கட்டமைப்பு அபிவிருத்தி வழங்க மறுத்தமையால் அத்தீவில் பாரம்பரியமாகக் குடியிருந்தோர்களின் அர்த்தபூர்வமான மீள்குடியேறுதல் மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் என்பவற்றுக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 9, 2021 அன்று அத்தீவிற்கான ஒரு குறுகிய விஜயத்தின் போது அவதானித்த சவால்களின் ஒரு கண்ணோட்டம் கீழே தரப்பட்டுள்ளது.

இரணைத்தீவு