நெருப்பு எப்படி எரியும் என்பதை
ஒருவரும் திட்டமிட முடியாது.

கொடுங்காற்றில் சாம்பல் எங்கெல்லாம் பறக்கும்
என்பதற்கும் வரைபடம் இல்லை.

படையாட்களின் எந்திரங்கள்
நினைவை அழிக்க முனையும்போது
எமது  கண்ணீர்
பெரு நாகங்களாக  மாறி
அவற்றைச் சுற்றி வளைக்கின்றன

எமது ஓரக்கண்ணின் வெஞ்சினம் ஒன்றே போதும்
இலங்கையை எரிக்க.

சேரன்

 

 


படம்: @AthavanNews