பாணம, சாஸ்த்ரவல பகுதியில் 1998ஆம் ஆண்டு வரை 75 குடும்பங்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அங்கு அந்தக் காலப்பகுதியில் 2 ஏக்கர்களில் அமைந்த விசேட அதிரடிப் படையினரின் முகாம் ஒன்று மாத்திரமே இருந்துள்ளது. போர் தீவிரமாக இடம்பெற்ற காலப்பகுதி அது. கிழக்கில் விசேட அதிரடிப்படையினருக்கான பயிற்சி முகாமொன்று இல்லாத காரணத்தால் முகாமொன்றை நிர்மாணிக்கத் தங்களுக்கு 50 ஏக்கர்கள் தேவைப்படுவதாகவும் மாற்றுக் காணிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் இராணுவம் கோரியிருக்கிறது. போர் தீவிரமாக இடம்பெற்றதாலும், மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் வழங்கப்பட்டதாலும் 75 குடும்பங்களும் அங்கிருந்து வெளியேற சம்மதித்திருக்கிறார்கள். அவர்களுள் 21 வயதான ரத்னமாலியும் மீண்டும் தன்னுடைய நிலத்துக்கு எப்போதாவது திரும்பலாம் என்ற நம்பிக்கையோடு ஒரு குழந்தையுடன் வெளியேறியிருக்கிறார்.

பொத்துவில் – பாணம பிரதான பாதைக்கு அருகாமையில் ஒதுக்கப்பட்டிருந்த மாற்றுக் காணிகளை மக்களோடு சேர்ந்து ரத்னமாலியும் துப்பரவு செய்திருக்கிறார். காணி அளவீட்டாளர் ஒருவரைக் கொண்டு காணிகளையும் அளவீடு செய்வதற்காக பணமும் வழங்கியிருக்கிறார். ஆனால், இன்றுவரை ரத்னமாலி உட்பட சாஸ்த்ரவல மக்களுக்கு மாற்றுக் காணிகளும் வழங்கப்படவில்லை, தங்களுடைய பூர்வீக நிலங்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படவுமில்லை.

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சிறிய வீடொன்றில் தனது பெரியம்மாவின் குடும்பத்துடன் தற்போது 3 பிள்ளைகள், கணவருடன் வாழ்ந்துவரும் 41 வயதான ரத்னமாலி, தனது பூர்வீக நிலத்தில் எவ்வாறு வாழ்ந்தார் என்பது குறித்தும், இப்போது நிலமின்றி, சொந்தங்கள் இன்றி, பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும் இவ்வாறு தனது கதையைக் கூறுகிறார்.

இங்கு கிளிக் செய்வதன் மூலமும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் புகைப்படக் கட்டுரையை வாசிக்கலாம்.

யுத்தம் இல்லை;

ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரைகள், “ராஜபக்‌ஷ பறித்த பாணம காணிகள் ரணில் மைத்திரி கைகளில்…” & “யார் சொன்னது நாங்கள் இங்கு இருக்கவில்லை என்று”