இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதற்காக கடந்த அரசாங்கங்களினால் 1956, 1984, 1990 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை.

குறிப்பாக இந்தச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பெருமளவில் முன்வைக்கப்படுகிறது. இச்சட்டத்தில் காணப்படும் பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கான வயதெல்லை, பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படாமை, திருமணத்தின்போது பெண்களின் விருப்பம் கருத்திற் கொள்ளப்படாமை மற்றும் பலதார மணம் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் போன்ற பால்நிலை சமத்துவமற்ற குறைபாடுகளைக் கொண்ட சட்டம் திருத்தப்படவேண்டும் என்பதில் முஸ்லிம் பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் முன்னின்று செயற்பட்டுவருகிறார்கள்.

இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்களும் சட்டத்திருத்த விடயத்தில் தீவிரமாக செயற்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியிருக்கும் பெண்களை ஏற்கனவே ‘மாற்றம்’ நேர்க்காணல் கண்டிருந்தது. “நீதியைத் தேடும் பெண்கள்” என்ற தலைப்பில் வெளியான 9 நேர்க்காணல்களின் தொடர்ச்சியாக இன்று 10ஆவது நேர்க்காணல் வெளியாகிறது.

ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரை, “நீதியைத் தேடும் பெண்கள்” நேர்க்காணல்கள் 123456789