Photos by Selvaraja Rajasegar

2017ஆம் ஆண்டு ‘மாற்றம்’ பல்வேறு விடயப் பரப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. முஸ்லிம் தனியாள் சட்டத்தால் பாதிப்புக்குள்ளான பெண்களின் குரல்கள், சூழல் பாதுகாப்புக்காகப் போராடி சுட்டுக்கொல்லப்பட்ட கேதீஸ்வரன், புதிதாக செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தினால் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள், காணாமலாக்கப்பட்டவர்களின் வருகைக்காக காத்திருக்கும் உறவுகள், நீர் அசுத்தமாவதைக் காரணம் காட்டி 5 – 6 தலைமுறைகளாக வாழ்ந்து வந்த தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றத் திட்டமிடும் அரச நிறுவனங்கள், சட்டவிரோதமாக தென்னிலங்கையிலிருந்து மீனவர்கள் வருகின்றமையினால் முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள், தேயிலைக் கொழுந்து பறிப்பதனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நிரந்தர காயங்கள், கேப்பாபிலவு மக்களின் தொடர் போராட்டம் என களக்கட்டுரைகளை கடந்த வருடம் பூராகவும் ‘மாற்றம்’ வெளியிட்டிருந்தது. அவற்றுள் தெரிவுசெய்யப்பட்ட புகைப்படங்களை தொகுத்து தந்திருக்கிறோம்.

இங்கு கிளிக் செய்வதன் மூலமும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் அதனைப் பார்க்கலாம்.

புகைப்படங்களூடாக 2017